ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா வின் சார்பாக திருச்சி ஆழ்வார்தோப்பு இக்ராஹ் மினி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரி முதல்வர் மன்சூர், ஓய்வுபெற்ற துணை ஆட்சியரும் கருமண்டபம் லயன்ஸ் கிளப் தலைவருமான சுப்பிரமணியன் மற்றும் திருச்சி ஐ ஏ எஸ் அகடமி பயிற்சி பள்ளியின் இயக்குனரும் முன்னாள் தாசில்தாருமான ஹாஜி அப்துல் அஜீஸ் அவர்களும் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார்கள் ஏராளமான ஆண்களும் பெண்களும் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.